சந்திராஷ்டமம் குறித்த அனுபவ விளக்கம்
இன்று காலை ஒரு முக்கிய பணிக்காக செல்ல வேண்டி இருந்ததால், நேரமாக அலுவலகம் சென்றுவிட்டு அந்த பணிக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு கிளம்பினால், சற்று தூரத்தில் ஒரு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் காரணமாக சாலையில் தடை. திரும்பிப் போனால் ரொம்பவும் சுத்து.... எனவே சந்துகளில் நுழைந்து, அவை சிறியதாக இருந்ததால் ஏகப்பட்ட ட்ராஃபிக். டேக் டைவெர்ஷன் , டேக் டைவெர்ஷன் என சிறிய தடை. சிறிது கால தாமதம். இவற்றைத் தாண்டி சந்திராஷ்டமம் குறித்த எந்த வித அச்சமும் தேவையில்லை.
குறிப்பிட்ட அந்த பணி எந்த தொய்வும் இல்லாமல் நல்லபடியாக முடிந்தது. எனக்கு சந்திரன் நான்காம் வீட்டில் திக் பலம் பெற்றதும் ஓர் காரணம்.
எனவே சந்திராஷ்டமம் குறித்த தேவையற்ற அச்சத்தைப் போக்கவே இந்த அனுபவ பதிவு.
No comments:
Post a Comment